செய்திகள்,முதன்மை செய்திகள் நைஜீரியாவில் மேலும் 8 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…

நைஜீரியாவில் மேலும் 8 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…

நைஜீரியாவில் மேலும் 8 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!… post thumbnail image
அபுஜா:-நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளிக்கூட விடுதியில் படித்து கொண்டிருந்த 230க்கும் மேற்பட்ட மாணவிகள கடத்தி சென்றனர்.

நைஜீரியா அரசால் அவர்களை மீட்க முடியவில்லை.இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவிகளை செக்ஸ் அடிமைகளாக விற்க போவதாக தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர்.இதனால் அதிபர் குட்லக் ஜோனாதன் அமெரிக்க உதவியை நாடினார்.இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க அமெரிக்கா ராணுவ வீரர்கள் குழுவை அனுப்பி வைக்கிறார்.

இந்நிலையில் நேற்று போகோஹரம் தீவிரவாதிகள் வடக்கு நைஜீரியாவில் ஹில்லி ருவோஷா என்ற கிராமத்திற்குள் புகுந்தனர். அங்கு வீடுகளுக்குள் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் வெளியே இழுத்து வந்தனர். பின்னர் இவர்களில் 8 சிறுமிகளை கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட சிறுமிகள் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி