March 4, 2019

பொருளாதாரம், முதன்மை செய்திகள்

பொருளாதாரச் செய்திகள்!

அங்கீகரிக்கப்படாத பல விதமான மறைமுக கட்டணங்களினால் தான் மக்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை என்னும் பணமில்லா பரிவர்த்தனைகள் மீதான ஆர்வம் குறைந்து போனதற்கு காரணம் என்று மும்பை ஐஐடி செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. வங்கி கணக்கு , சிம் கார்டுகளுக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான ,மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு ,குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். மாநில அரசுகளின் வரி வருவாய் அதிகரித்தாலும் , மத்திய அரசின் பங்களிப்பான இழப்பீடு தொடர்ந்து கிடைக்கும் என்று ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

நலம் தரும் தாவரங்கள்!

துளசி: எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம் . துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல்,வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் , புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். துளசி இலைக்கு மன இறுக்கம் , நரம்புக்கோளாறு, ஞாபகச்சக்தி இன்மை ,ஆஸ்துமா ,இருமல் மற்றும் பிற நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.துளசி இலைச்சாறில் தேன்,இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

பரபரப்பு செய்திகள்

பரபரப்பான மாவட்டச்செய்திகள்

சென்னை மாநகராட்சியில் உள்ள மசாஜ் சென்டர்களை முறைப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாநகரில் 14 இடங்களில் ரூ. 2.58 கோடி மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சுகாதாரம் பாதுகாத்தல் பணி விரைவில் துவங்கவுள்ளது. அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க தொகுதிப்பங்கீட்டு குழுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் நடத்திய பேச்சு வார்த்தையில் 2 தொகுதிகள் வழங்குவது என உடன்பாடு செய்யப்பட்டது. சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சங்ககாலம், முதன்மை செய்திகள்

சங்ககாலக் குறிப்புகள்-பகுதி1

முதற் சங்கம்: இருந்த இடம்:தென் மதுரை (பஃறுளி ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்:காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர் பாடல் இயற்றிய அரசர்கள்:7பேர் காலம்:4440 ஆண்டுகள். இருந்த புலவர்களின் எண்ணிக்கை:549 பாடிய புலவர்களின் எண்ணிக்கை :4449 நூல்கள்: பெரும் பரிபாடல், முதுநாரை, முது குருகு, களரியாவிரை,அகத்தியம். புலவர்கள்: அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த வேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன், இலக்கண நூல்:அகத்தியம் தொடரும்………..

திரையுலகம், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

இன்ஸ்டாகிராம் சூடுபிடுக்கிறதா?

பாரிஸ் பாரிஸ் படத்தை அடுத்து கோமாளி, இந்தியன்-2 படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால். அதே போல் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வரும் அவர், டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 90.5 லட்சத்தை எட்டியிருக்கிறது. விரைவில் 1 கோடியை எட்டுவார் என தெரிகிறது.

தமிழ்ப்பேழை, பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

தென்னாட்டு மொழியினம்:பாகம்-2

தெலுங்கு: தமிழ் நாட்டின் வடக்கேயுள்ள ஆந்திர மாநிலத்தில் பேசப்படும் மொழி இது. ஹைதராபாத்திலும் பலர் தெலுங்கு பேசுகின்றனர். வட மொழியாளர் தெலுங்கை ஆந்திரம் எனச் சுட்டுவர் .பழந்தமிழ் இலக்கியம் ஆந்திரரை வடுகர் என்றும் அந்நாட்டை மொழி பெயர் தேயம் (மொழி வேறுபட்ட நாடு ) என்றும் கூறுகிறது. தேன் போன்ற இனிமை உடைய மொழி என்னும் பொருளில் தெனுகு>தெலுகு >தெலுங்கு என்று பெயர் அமைந்திருக்கலாம் என்பர். கலிங்கம் முதலான மூன்று லிங்கக் கோயில்களை உடையது என்னும் பொருள் பொதிந்த சொல்லாகிய திரிலிங்கம் என்பது திரிந்து தெலுங்கு ஆயிற்று என்பர் ஒரு சிலர். இதன் எழுத்து முறை தேவநாகரியை ஒட்டி அமைந்தது.தேவநாகரி எழுத்துடன் திராவிட மொழிக்கு இன்றியமையாத ‘ற’ கர எழுத்தும் பெற்றுள்ளது. வடமொழி அறிஞர்களாகிய நன்னயப்பட்டர் முதலானோர் இலக்கியம் எழுதி வளர்த்தமையால் இம் மொழியில் வடமொழிச்சார்பு மிகுதி. நன்னயருக்குப் பின் சைவப் புலவர் சிலர் வட சொற்கள் குறைந்த நடையைப் பின்பற்றினர்.இதை ‘ஜானு தெலுங்கு’ என்பர். எனினும் இம்முயற்சி வெற்றிபெறவில்லை.நன்னயரின் தெலுங்கே மக்களுக்கு விளங்கும் தெலுங்காக உள்ளது. தொடரும்…………………

தொழில்நுட்பம், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

ஒரு நிமிடம் சிக்னல் போட்டுடாங்க!

பல கருவிகளை கண்டறிந்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர் கர்ரெட் அகஸ்டஸ் மார்கன் 1877ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். மார்கன் , சிறுவயதிலேயே படிப்பை கைவிட்டார் . பல இடங்களில் கூலி வேலை செய்து வந்த வருமானத்தில் ஒரு ஆசிரியரிடம் டியூசன்சேர்ந்து கல்வி கற்றார். இவர் தையல் இயந்திரத்தின் பெல்ட்டை கட்டுவதற்கானவழியை கண்டுபிடித்த பிறகு , மிகவும் பிரபலானார். 1907ஆம் ஆண்டு தையல் இயந்திரம் , ஷூ பழுது பார்க்கும் கடையை தொடங்கினார் .படிப்படியாக பல்வேறு தொழில்களில் கால் பதித்தார் . 1914ஆம் ஆண்டு புகை , நச்சு வாயுக்களிடம் இருந்து காப்பதற்கான பாதுகாப்பு கவசத்தை வடிவமைத்து காப்புரிமை பெற்றார் . சுருள் கூந்தலை நேராக்கும் கிரீம்,சீப்பு,கூந்தல் சாயம் போன்ற அழகு சாதனப் பொருட்களைக் கண்டுபிடித்தார். எளிமையான , திறன் வாய்ந்த டிராஃபிக் கன்ட்ரோல் சிக்னல் முறையைக் கண்டறிந்தார். இதை பயன்படுத்தி விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கும் காப்புரிமை பெற்றார். 100 கிரேட்டஸ்ட் ஆப்பிரிக்கன் அமெரிக்கன்ஸ் என்ற புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. தன் உழைப்பாலும் திறமையாலும் பல கருவிகளைக் கண்டறிந்து , பல சாதனைகளை படைத்த கர்ரெட் மார்கன் தனது 86வது வயதில் (1963) மறைந்தார்.

அரசியல், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

பரபரப்பான தேர்தல் களம்-2019

முக்கிய துணுக்குகள்: 5நாடாளுமன்ற தொகுதிகள் போதாதது என்றும் 2சட்ட மன்ற தொகுதிகள் கூடுதலாக வேண்டும் என்றும் அ.தி.மு.க.விடம் தே.மு.தி.க மல்லுக்கட்டி வருகிறது .இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நிலை நீடிக்கிறது. விஜயகாந்துடன் சரத்குமார் திடீர் சந்திப்பு -அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்ததாக பேட்டி. தி.மு.க. விடுதலை சிறுத்தைகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுபறி. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை கண்டறிந்து உள்ளோம்.-கே.எஸ்.அழகிரி பேட்டி.

அரசியல், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

ஈஷா யோகா மையமும் ஜனாதிபதியும்!

கோவையில் நடக்கும் இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம் நாத் கலந்து கொள்கிறார் . மார்ச்-4 ஆன இன்று மிகவும் கோலாகலமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது. வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஈசனின் அருளை பெறுவார்கள். இத்தினத்தில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இசைக்கச்சேரி, நள்ளிரவு யோகா, பாரம்பரிய கலாச்சாரத்தை நிலைநாட்டும் வகையில் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. இந்த விழா ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதி யோகி சிலை மைதானத்தில் நடப்பது வழக்கம். இந்தாண்டு சிவராத்திரி நகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கச்சேரி செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்.

பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள், விளையாட்டு

மல்யுத்த வீரருக்கு இப்படி ஓர் ஆசையா?

பல்கேரியாவில் சர்வதேச மல்யுத்த போட்டி நடந்தது. இதில் இந்திய நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ உடல் எடைப் பரிவில் அமெரிக்காவின் ஜோர்டான் ஆலிவரை 12-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.அதே சமயம் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 53 கிலோ பிரிவின் இறுதிசுற்றில் 2-9 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் குயான்யூ பாங்கிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று . வெற்றிக்கு பிறகு தங்க மகன் பஜ்ரங் பூனியா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தங்கப்பதக்கத்தை , பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய இந்திய விமானி அபிநந்தனுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். அவர் என்னை வெகுவாக கவர்ந்துள்ளார் . அவரை சந்தித்து அவருடன் கைகுலுக்கிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to Top