செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு !

போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு !

போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு ! post thumbnail image
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் நகரம் முழுவதும் அதிகரித்தது.தேனாம்பேட்டையில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கித் தவித்தது.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜியார் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.இதனால் பல ஊர்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் சென்னைக்கு வந்தனர்.இதனால் நேற்று காலையில் இதே நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.அனைவரும் ஆட்சியாளர்களை திட்டுவதை கண்கூடாக பார்க்கமுடிந்தது.வெளியூர் வாகனங்களும் அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்தன.டாஸ்மாக்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது.முதல்வர்,துணைமுதல்வர் ,அமைச்சர்கள் செல்வதற்காகவும் போக்குவரத்து அங்கங்கே நிறுத்தப்பட்டன.

இந்நிலையில்,தேனாம்பேட்டை அருகே சாலையில் ஆம்புலன்ஸ் சிக்கி தவித்தது பார்ப்போரை கோபமும் வேதனையும் அடைய வைத்தது.எவ்வளவு முயன்றும் ஆம்புலன்ஸ் நகர முடியவில்லை.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி