இந்த சூழ்நிலையில் அதிரடியாக விளையாடிய ஹூடா 15 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் குவித்து அனுரீத் சிங் பந்தில் போல்டாகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 126 ஆக இருந்தது. இதேபோல், மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பாக்னர் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. பஞ்சாப் தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளையும், ஜான்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
பின்னர் விளையாடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவாக் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய் 37 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதிரடி மன்னன் மேக்ஸ்வெல்லும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து பாக்னர் பந்துவீச்சில் கேட்சானார். அதன் பிறகு வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இதனால் 20 ஒவர் முடிவில் 8 விகெட்டுகளை இழ்ந்து 136 ரன்களை மட்டுமே பஞ்சாப் எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பாக்னர் அபராமாக பந்து வீசிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் பரிசை தட்டி சென்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி