செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…

6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…

6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!… post thumbnail image
புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலமான ‘மங்கள்யான்’, சிகப்பு கோளின் சுற்றுப்பாதையில் 6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. ஆறு மாதங்களுக்கு மட்டுமே செவ்வாயின் சுற்றுப்பாதையில் பயணம் செய்யும் வகையில் மங்கள்யான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அதையும் தாண்டி, நீண்ட காலத்திற்கு மங்கள்யான் செவ்வாயின் சுற்றுப்பாதையில் செல்லும் என தெரியவந்துள்ளது.

செவ்வாயின் சுற்றுப்பாதையில் பயணம் செய்வதற்கு ஆண்டொன்றுக்கு 2 கிலோ கிராம் எரிபொருளே தேவை என்ற நிலையில், தற்போது 37 கிலோ கிராம் எரிபொருளை மங்கள்யான் இருப்பு வைத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் இன்னும் பல ஆண்டுகளுக்கு செவ்வாயின் சுற்றுப்பாதையில் மங்கள்யான் பயணம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மங்கள்யானில் உள்ள துணை உபகரணங்கள் கதிரியக்க சூழலையும், நீண்ட கிரணங்களையும் தாங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது மங்கள்யானில் உள்ள ஐந்து அறிவியல் கருவிகள் நல்ல நிலையில் இயங்குகின்றன. செயற்கைகோளும் திடமாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பள்ளத்தாக்குகள் மற்றும் உயர்ந்த மலைகளை படம்பிடித்து 200 மில்லியன் கி.மீ தூரத்தில் உள்ள பூமிக்கு மங்கள்யான் அனுப்பி வருகிறது.

மங்கள்யானின் இந்த சாதனை மைல் கல் குறித்து பேசிய மத்திய விண்வெளித்துறை மந்திரி ஜிதேந்திர சிங், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் விண்கலமான மங்கள்யான் குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது. இது மேலும் தொடருமானால் நம்மால் செவ்வாய் கிரகம் பற்றிய அதிக அளவிலான தகவல்களை பெறமுடியும் என்றார். மேக் இன் இந்தியா என்ற திட்டத்திற்கு ஒளிரும் உதாரணமாக மங்கள்யான் உள்ளதாகவும் ஜிதேந்திரா கூறியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி