செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!…

தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!…

தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!… post thumbnail image
ஆக்லாந்து:-நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் அரையிறுதி போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா விறுவிறுப்பாக ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம்ட 43 ஓவராக குறைக்கப்பட்டது. இந்த ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் எடுத்தது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நியூசிலாந்து அணிக்கு 43 ஓவரில் 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர்களாக குப்தில்- மெக்கல்லம் களம் இறங்கினார்கள். மெக்கல்லம் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். குப்தில் 38 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த வில்லியம்சன் 6 ரன் எடுத்து ஏமாற்றினார். 4-வது வீரராக வந்த டெய்லர் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு எலியாட், ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் நியூசிலாந்து வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், ஆண்டர்சன் 58 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரோஞ்சி 8 ரன்னில் அவுட் ஆனார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் எலியாட் நம்பிக்கையுடன் விளையாடினார். 7-வது விக்கெட்டுக்கு எலியாட் உடன் வெட்டோரி ஜோடி சேர்ந்தார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடைசி நேர பரபரப்பில் பீல்டிங்கில் கோட்டை விட்டனர். இதனால், கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டெய்ன் அந்த ஓவரை வீசினார்.

முதல் பந்தில் வெட்டோரி ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தில் எலியாட் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை வெட்டோரி பவுண்டரி அடித்தார். 4-வது பந்தில் பை மூலம் ஒரு ரன் கிடைத்தது. இதனால் கடைசி 2 பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தை எலியாட் சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். எலியாட் 73 பந்தில் 84 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். இதன்மூலம் முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி, ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் இந்தியா அல்லது ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி