செய்திகள் 48 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருப்பார் என தெரிந்தும் காதலியை மணந்த காதலர்!…

48 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருப்பார் என தெரிந்தும் காதலியை மணந்த காதலர்!…

48 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருப்பார் என தெரிந்தும் காதலியை மணந்த காதலர்!… post thumbnail image
லண்டன்:-ஜான் பென்ஸ்டன் என்ற அந்த இளைஞரும் மிச்சேல் ஓ கார்னர் பெண்ணும் காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தையும் பெற்று கொண்டார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில், மிச்சேலுக்கு கர்ப்பபை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

தீவிர சிகிச்சை மேற்கொண்டும் நோயின் தாக்கம் குறையவில்லை. ஆரம்பத்திலேயே புற்றை கண்டறிந்திருந்தால் சரி செய்திருக்கலாம் என்று மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர்.
இந்நிலையில் இன்னும் 48 மணி நேரங்கள் மட்டுமே மிச்சேல் ஓ கார்னர் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறியதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார்.

இதன்படி மருத்துவமனையின் உதவியுடன் அங்கே பெற்றோர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் செவிலியர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்து நான்கு வாரங்கள் கழித்தே மிச்சேல் இறந்தார். ஜான் பென்ஸ்டன் தற்போது தனது எட்டுமாத பெண் குழந்தையுடன் அவரின் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி