அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!…

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!…

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!… post thumbnail image
புதுடெல்லி:-ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்குச் செல்லும் சுற்றுப்பயணத்தில் மொரீஷியஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகரிலிருந்து இலங்கை புறப்பட்டார். அவர் இன்று அதிகாலை 5.25 மணிக்கு கொழும்பு சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார். அவரை இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேரில் சென்று வரவேற்றார்.

இலங்கை சென்றுள்ள அவர் இலங்கை அதிபர் ஸ்ரீசேனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
கடந்த 28 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி