செய்திகள் காதுகள் பெரிதாக இருந்ததால் 10 வயது மகனை கொன்ற தாய்!…

காதுகள் பெரிதாக இருந்ததால் 10 வயது மகனை கொன்ற தாய்!…

காதுகள் பெரிதாக இருந்ததால் 10 வயது மகனை கொன்ற தாய்!… post thumbnail image
அங்காரா:-துருக்கி தலைநகரான அங்காராவில் வசிக்கும் நுரே சகான்(37) என்ற பெண்மணி தனது 10 வயது மகனுக்கு காதுகள் பெரிதாய் இருப்பதால் மிகுந்த கவலைப்பட்டார். எனவே, அவனை காஸி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற அவர், அவர்களின் ஆலோசனைப்படி பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் அறுவை சிகிச்சைக்கும் சம்மதித்தார். இதற்காக ஏராளமான பணத்தை செலவழித்தும் அவனது காதுகள் இன்னும் பெரிதானதை போல் தோற்றமளித்ததால் மனம் நொந்த நுரே சகான் மகனை கொலை செய்ய தீர்மானித்தார்.

இதனையடுத்து, பாசமாக பேசியபடி அவனை ஆஸ்பத்திரியில் உள்ள பெண்கள் கழிவறைக்குள் அழைத்து சென்ற அவர், தனது கைக்குட்டையால் அவனது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து காரில் விரைவாக தப்பி ஓடினார். எனினும், வேகமாக தப்பிக்க முயன்ற அவரது காரின் மீது இன்னொரு வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்த அதே காஸி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கழிவறையில் இருந்து அவரது மகனின் சடலத்தை மீட்ட போலீசார், இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய போது, அந்த ராட்சத காதுகளால் என் மகன் மிகவும் அசிங்கமான தோற்றத்தை பெற்றிருந்தான். வருங்காலத்தில் அனைவரும் அவனை கேலி செய்தால் சங்கடப்படுவான் என்பதற்காகவே நான் கருணைக்கொலை செய்தேன் என நுரே சகான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி