செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 8வது ஐ.பி.எல்: சென்னை, புனேயில் ஏப்ரல் 8ம் தேதி தொடக்கம்!…

8வது ஐ.பி.எல்: சென்னை, புனேயில் ஏப்ரல் 8ம் தேதி தொடக்கம்!…

8வது ஐ.பி.எல்: சென்னை, புனேயில் ஏப்ரல் 8ம் தேதி தொடக்கம்!… post thumbnail image
மும்பை:-ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 8–வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8ம் தேதி தொடங்குகிறது. மே மாதம் 24ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னை, புனே ஆகிய இடங்களில் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடத்தப்படவில்லை. டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். ஆட்டம் நடக்கிறது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் வேண்டுகோளுக்கு இணங்க புனேயிலும் போட்டி நடக்கிறது. பஞ்சாப் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் அங்கு நடைபெறும்.

ஏற்கனவே அந்த அணியின் உள்ளூர் மைதானமான மொகாலியில் எத்தனை ஆட்டம் நடைபெறும் என்பது பற்றி தெரியவில்லை. அந்த அணி கடந்த காலங்களில் தர்மசாலா, கட்டாக்கில் விளையாடியது. இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டங்களில் சில போட்டிகள் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடத்தப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி