செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்க்காக கதை ரெடி செய்கிறாரா எஸ்.ஜே.சூர்யா?…

நடிகர் விஜய்க்காக கதை ரெடி செய்கிறாரா எஸ்.ஜே.சூர்யா?…

நடிகர் விஜய்க்காக கதை ரெடி செய்கிறாரா எஸ்.ஜே.சூர்யா?… post thumbnail image
சென்னை:-இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த ‘இசை’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் அடுத்து என்ன படம் இயக்கப்போகிறார் என்பது தான் அனைவரின் கேள்வியும்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் இசை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அழைத்த போது எந்த ஒரு காரணமும் சொல்லாமல் முதல் ஆளாக வந்து நின்றார் விஜய். அவரை இயக்கி 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது, கண்டிப்பாக அவருடன் மீண்டும் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கையில் விஜய்க்கான கதையை எஸ்.ஜே.சூர்யா ரெடி செய்ய ஆரம்பித்து விட்டார் போல.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி