அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…

பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…

பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!… post thumbnail image
புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவர் தற்போது திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது தூய்மை இந்தியா திட்டத்தையும் பாராட்டி பேசினார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சசிதரூர் இப்போது மீண்டும் பிரதமர் மோடியை பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தகவல் பரிமாற்றம், அரசாங்கத்தின் திட்டங்கள் பற்றி மக்களிடம் திறம்பட எடுத்து சொல்வது ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சாற்றலை சொல்லலாம். மக்களை கவரும் வகையில் ஏற்ற, இறக்கங்களுடன் அவர் மிகவும் சிறப்பாக பேசுகிறார். அவர் சிறந்த பேச்சாளர் என்பதில் சந்தேகம் இல்லை. இது அரசுக்கு சாதகமான அம்சம். ஆனால் இது மட்டுமே போதாது.

மோடி சிறப்பாக செயல்பட்டு நன்மைகள் செய்வார் என்று நம்பித்தான் மக்கள் அவருக்கு வாக்கு அளித்தார்கள். ஆனால் அவர் சிறப்பாக பேசுகிறாரே தவிர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக செயல்படவில்லை. சொல்வதை அவர் செயலில் காட்டவேண்டும்.
பாரதீய ஜனதா இந்துத்வா கொள்கையை முன்னிலைப்படுத்துகிறது. இது தொடர்பாக ஆட்சேபகரமாக பேசும் மந்திரிகள் மீது பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்ப்பது சரி அல்ல.
இவ்வாறு சசிதரூர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி