அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஆந்திராவில் எம்.பி.க்கு பன்றிக்காய்ச்சல்!…

ஆந்திராவில் எம்.பி.க்கு பன்றிக்காய்ச்சல்!…

ஆந்திராவில் எம்.பி.க்கு பன்றிக்காய்ச்சல்!… post thumbnail image
ஐதராபாத்:-கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான கீதா என்பவர் மார்பு வலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி உள்ளிட்டவை ஐதராபாத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பான முடிவுகள் வந்து சேர்ந்துள்ள நிலையில், கீதாவுக்கு பன்றிக் காய்ச்சல் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. விசாகப்பட்டினம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை முன்னேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி