லஷ்மணனின் பல முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6.50 மணியளவில் அவர் மரணம் அடைந்தார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல்வாதிகள் குறித்து கேலிச்சித்திரங்கள் வரைந்து சமூகத்தின் பிரதிபலிப்பாக திகழ்ந்தவர் ஆர்.கே லட்சுமணன் இருப்பினும் அவர் பிற்பகுதியில் கார்டூன்கள் வரைவதை நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி கமலா மற்றும் மகன் ஸ்ரீநிவாசால் அவரை பார்த்துக் கொள்ளபட்டு வந்தனர். கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி