செய்திகள் முதல் முறையாக குழந்தையைப் பார்த்து வியக்கும் பார்வையற்ற தாய்!…

முதல் முறையாக குழந்தையைப் பார்த்து வியக்கும் பார்வையற்ற தாய்!…

முதல் முறையாக குழந்தையைப் பார்த்து வியக்கும் பார்வையற்ற தாய்!… post thumbnail image
வாஷிங்டன்:-வட அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் 29 வயதான கேத்தி பீட்ஸ். இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா பெண்களையும் போலவே தனக்கு பிறக்கப் போகும் குழந்தை எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மிதந்து வந்தார்.

ஆனால், பிரசவ தேதி நெருங்கும் போது பெரும் துயரம் அவரை ஆட்கொண்டது. காரணம் மற்ற பெண்களால், பிரசவம் முடிந்து தன் குழந்தையை பார்க்க முடியும், பார்வையற்ற தன்னால் தன் குழந்தையை எப்படிப் பார்க்க முடியும் என்று கேத்தி ஏங்கினார். இப்படி ஏங்கிய கேத்திக்கு சிறப்புக் கண்ணாடி மூலம் தன் குழந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக குழந்தையைப் பார்த்த அவர் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தார்.

கேத்தியின் இந்த சந்தோஷமான அனுபவத்தைதான் வீடியோவாக பதிவு செய்து அதை யூ டியூபிலும் பதிவேற்றியுள்ளனர் . இந்த வீடியோவில் பருமனான கருப்பு ஹெட்செட் போலத் தோற்றமளிக்கும் பார்வையை மேம்படுத்தும் கண்ணாடியை அணிந்திருக்கும் கேத்தி தன் குழந்தையைப் பார்த்து அதிசயிக்கும் காட்சி காண்பவரை நெகிழச் செய்துள்ளது. நான் பார்க்கும் முதல் குழந்தை எனது குழந்தைதான். இது என்னை சந்தோஷத்தில் மூழ்கடித்துள்ளது என்று கேத்தி கூறியுள்ளார். தன் குழந்தையைப் பிரசவித்த மறு நொடியே கேத்தி தன் குழந்தையைப் பார்க்க விரும்பியதாக கேத்தியின் சகோதரி இவான் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார். தங்கையைப் போலவே இவரும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் கேத்தி இந்த புதிய தொழில்நுட்ப சாதனம் மூலம் நேரடியாகக் கண்டு களித்து சந்தோஷத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி