செய்திகள்,முதன்மை செய்திகள் ஜல்லிக்கட்டுக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர மனுவாக விசாரிக்க கோரிக்கை!…

ஜல்லிக்கட்டுக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர மனுவாக விசாரிக்க கோரிக்கை!…

ஜல்லிக்கட்டுக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர மனுவாக விசாரிக்க கோரிக்கை!… post thumbnail image
புதுடெல்லி:-ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் அதே மாதம் 19ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழக குழு டெல்லி சென்று மத்திய அரசுடன் பேசி வருகிறது.இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அவசரம் கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி