செய்திகள் 10ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!…

10ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!…

10ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!… post thumbnail image
காசியாபாத்:-நொய்டாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தவர் நவீன். இவரது நண்பர்கள் அமான், டீட்டூ. நவீன் ஒரு திருமணத்தின் போது 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை பார்த்துள்ளார். அதில் இருந்து இருவரும் நண்பர்களாகியுள்ளார். அந்த மாணவி நேற்று டியூசன் சென்றுவிட்டு தன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது நவீன் அவளிடம் ஆசைவார்த்தை கூறி ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தன்னுடன் தனது நண்பர்களையும் இணைத்துக்கொண்டார். ஓட்டலுக்கு சென்றதும் மூன்று பேரும் அந்த மாணவியை கற்பழித்துள்ளனர்.

அதன்பின் அவளை அருகில் உள்ள ஒரு இடத்தில் விட்டுவிட்டு ஓடி விட்டனர். இதுகுறித்து அந்த மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அந்த மூன்று பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி