அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சசிதரூரின் வீட்டு வேலைக்காரரிடம் சிறப்புக்குழு விசாரணை!…

சசிதரூரின் வீட்டு வேலைக்காரரிடம் சிறப்புக்குழு விசாரணை!…

சசிதரூரின் வீட்டு வேலைக்காரரிடம் சிறப்புக்குழு விசாரணை!… post thumbnail image
புதுடெல்லி:-திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கடந்த 6ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கிய தனது இறுதி மருத்துவ அறிக்கையில், சுனந்தாவின் மரணம் விஷத்தால் நிகழ்ந்ததாகவும், இயற்கை மரணம் அல்ல என்றும் கூறியிருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை டெல்லி போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு விசாரணையை தொடங்கி உள்ளது. அதன்படி சசிதரூரின் வீட்டு வேலைக்காரர் நாராயண் சிங்கிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. இமாச்சல பிரதேசத்தில் இருந்த நாராயண் சிங்கை இதற்காக டெல்லிக்கு சிறப்புக்குழு வரவழைத்தது.பின்னர் மறைவான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரிடம், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அவருடன், டெல்லி ஓட்டல் ஊழியர்களிடமும் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக நாராயண் சிங்கிடம் ஏற்கனவே 2 முறை விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெல்லி போலிஸ் கமிஷனர் பிஎஸ் பாஸ்ஸிடம் , சசி தரூர் மீது சந்தேகம் ஏற்பட்டதா என்று கேட்டபோது நேரடியாக பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில் தற்போது வரை இந்த விவகராத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி