செய்திகள்,திரையுலகம் புற்று நோய் பாதித்த 10 வயது சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ‘சூப்பர் ஸ்டார்’!…

புற்று நோய் பாதித்த 10 வயது சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ‘சூப்பர் ஸ்டார்’!…

புற்று நோய் பாதித்த 10 வயது சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ‘சூப்பர் ஸ்டார்’!… post thumbnail image
தெலுங்கானா:-தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் ஆபேகாம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர். பத்மா தம்பதி மகன் பாலு (10). புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவன் ஐதராபாத்தில் உள்ள தனியார் புற்று நோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மரணத்தின் விளிம்பில் இருக்கும் அவன் தனது அபிமான நடிகர் சிரஞ்சீவியை பார்க்க வேண்டும் என்ற தனது கடைசி ஆசையை தொண்டு நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தான்.

இதை அறிந்த நடிகரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சிரஞ்சீவி நேற்று பாலு சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்து பாலுவை சந்தித்தார். சிறுவன் பாலுவுக்கு பழங்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார். மேலும் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்ட கயிறை சிறுவனின் கையில் கட்டி விரைவில் பூரண குணம் அடைவார் என்று ஆசி வழங்கினார். சிரஞ்சீவியை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் அவருடன் ஆடிப்பாட விரும்புவதாக பாலு கூறினார். இதை கேட்ட சிரஞ்சீவி தனது 150–வது படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தார். இதை கேட்டு பாலு மகிழ்ச்சி அடைந்தான்.

சிறுவன் பாலு பூரண குணமடைய வேண்டும் என்று விரும்புவதாக கூறிய சிரஞ்சீவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிகளுக்கு பிரபலங்கள் பலர் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஆகியோர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தங்களது ரசிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி