செய்திகள் மும்பை பள்ளியில் 4 வயது சிறுமி கற்பழிப்பு!…

மும்பை பள்ளியில் 4 வயது சிறுமி கற்பழிப்பு!…

மும்பை பள்ளியில் 4 வயது சிறுமி கற்பழிப்பு!… post thumbnail image
மும்பை:-மும்பை புறநகர் பாந்தூப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்ப்பவர் கேசரி உபாத்யாய். இங்கு அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி பிரி.கே.ஜி. வகுப்பில் படித்து வந்தாள். சம்பவத்தன்று ஆசிரியர் கேசரி உபாத்யாய் 4 வயது சிறுமியை கழிவறைக்கு அழைத்து சென்று கற்பழித்தார். பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பாந்தூப் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். ஆசிரியர் கேசரி உபாத்யாயை கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளிக்கூடத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி