செய்திகள்,முதன்மை செய்திகள் பாகிஸ்தானில் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 84 மாணவர்கள் உட்பட 100 பேர் பலி!…

பாகிஸ்தானில் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 84 மாணவர்கள் உட்பட 100 பேர் பலி!…

பாகிஸ்தானில் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 84 மாணவர்கள் உட்பட 100 பேர் பலி!… post thumbnail image
பெஷாவர்:-பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தும் பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை சிறைப்பிடித்தனர். தீவிரவாதிகளிடமிருந்து மாணவர்களை விடுவிக்க அந்நாட்டு ராணுவம், தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகள்- ராணுவம் இடையே நிகழ்ந்த பயங்கர மோதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு வஜிரிஸ்தானில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தலிபான் கூறியுள்ளது. உயிரிழந்த 100 பேரில் 84 பேர் மாணவர்கள் என்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோதலின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் 40 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த பள்ளி தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வெடிகுண்டுகளுடன் தலிபான் தற்கொலைப் படையினர் 7 பேர் பள்ளியில் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் வாகனங்களுக்கு தீ வைத்தனர். தீவிரவாதிகள் பிடியில் உள்ள பெஷாவர் பள்ளியில் 2 குண்டுகள் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கி முனையில் மாணவர்கள் அனைவரும் பள்ளியின் கலையரங்கத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதி ஒருவன் உடலோடு கட்டிய குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளான். குண்டுகள் வெடித்ததால் பள்ளி சுற்றுவட்டாரத்தை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. பள்ளி தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில் தீவிரவாதிகள் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பள்ளிக்கு அருகில் உள்ள 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொதுமக்கள் இரத்த தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி