செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இயக்குனர் பாலச்சந்தருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை!…

இயக்குனர் பாலச்சந்தருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை!…

இயக்குனர் பாலச்சந்தருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை!… post thumbnail image
சென்னை:-தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர் கே.பாலச்சந்தர். இவருக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர பிரிவில் வைத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

செயற்கை சுவாசமும் பொருத்தப்பட்டது. நேற்று பாலச்சந்தர் உடல் நிலை மோசமடைந்ததாக செய்தி பரவியது. இதையடுத்து திரையுலகினர் பலர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். நடிகர் ரஜினிகாந்த், நடிகை குஷ்பு டைரக்டர் பாரதி ராஜா, கவிஞர் வைரமுத்து உள்பட பலர் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர். பின்னர் ரஜினி கூறுகையில், பாலச்சந்தர் நலமாக இருக்கிறார். நலமாக இருக்கிறீர்களா என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு சிரித்தவாறு நலமாக இருக்கிறேன் என்று பதில் அளித்தார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்றார். இது போல் நடிகை குஷ்புவும், டைரக்டர் பாலச்சந்தர் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார் என்றார்.

பாலச்சந்தர் ஒரு மேன்மையான மனிதர். அவர் உடல் நிலைப்பற்றி யாரும் விரும்பத்தகாத வதந்தி களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். டைரக்டர் வசந்த், மனோபாலா, பிரமிட் நடராஜன், கே.எஸ் சீனிவாசன், மோகன்ராம் ஆகியோரும் நேரில் உடல் நலம் விசாரித்தார்கள்.மருத்துவமனை சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில், 4 வயதான பாலச்சந்தர் வயோதிகம் சார்ந்த பிரச்சனையாலும், காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவரது உடல் நலம் சிறப்பாக உள்ளது. தேவைப்படும் சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பாலசந்தருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திரையுலகினர் பலர் இன்றும் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி