செய்திகள்,திரையுலகம் புதிய வேலையில் சேர்ந்த நடிகை ஸ்வேதா பாசு!…

புதிய வேலையில் சேர்ந்த நடிகை ஸ்வேதா பாசு!…

புதிய வேலையில் சேர்ந்த நடிகை ஸ்வேதா பாசு!… post thumbnail image
சென்னை:-கடந்த சில மாதங்களுக்கு முன் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு இல்லத்தில் தண்டனை அனுபவித்த பின் விடுதலை செய்யப்பட்டவர் நடிகை ஸ்வேதா பாசு. அவர் கைது செய்யப்பட்டதும் அவருக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்தன. அவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்களையும் கைது செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஒரு வழியாக அந்தப் பிரச்சனைகள் அப்படியே அமுக்கப்பட்டு ஸ்வேதா பாசுவும் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின் ஸ்வேதா பாசு மும்பைக்குச் சென்று விட்டதாகத் தெரிகிறது.

அவருக்கு வாய்ப்புத் தர தயாராக இருப்பதாக சில ஹிந்தி, தெலுங்கு இயக்குனர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், தனக்கு எந்தக் கதையும் பிடிக்காததால் புதிய படங்களில் நடிக்கவில்லை என ஸ்வேதா பாசு கூறியிருந்தார். இதனிடையே ஸ்வேதா புதிதாக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன். பிரபல ஹிந்தி இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் கதை ஆலோசகராக ஸ்வேதா பாசு வேலைக்குச் சேர்ந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதோடு ஸ்வேதா விபச்சார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் அவருக்கு ஹைதராபாத் நீதிமன்றம் அவருக்கு நற்சான்று அளித்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்வேதா பாசு, தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பாரா அல்லது புதிய வேலையில் மட்டும் தற்போது கவனம் செலுத்துவாரா என்பதுதான் இப்போதைய கேள்வி. அவருடைய விஷயத்தை மீடியாக்கள் ஓவராகவே வெளியிட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு அவர் கைதான போது எழுந்தது. நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்துத்தான் அவருடைய எதிர்காலம் அமையும் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி