செய்திகள்,திரையுலகம் ஆந்திர புயல் நிவாரணம்: நடிகர் விஜய் திடீர் உதவி!…

ஆந்திர புயல் நிவாரணம்: நடிகர் விஜய் திடீர் உதவி!…

ஆந்திர புயல் நிவாரணம்: நடிகர் விஜய் திடீர் உதவி!… post thumbnail image
சென்னை:-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஹுட் ஹுட் புயல் தாக்கியதால், பலகோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது. உடனடியாக, தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பலர் பல லட்சம் ரூபாய் நிதிஉதவியை அறிவித்தனர். ஒரு சில நடிகர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரண வேலைகளிலும் ஈடுபட்டனர்.

நேற்று தெலுங்குத் திரையுலகம் சார்பில் மேமுசைதம் என்ற பெயரில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி சுமார் 11 கோடி ரூபாய் வசூல் செய்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவிடம் தெலுங்குத் திரையுலகின் நிவாரணநிதியாக வழங்கினார்கள். அந்தக்கலைநிகழ்ச்சியில், அனைத்து தெலுங்கு திரையுலகினரும் கலந்துகொண்டார்கள்.

இதனிடையே, தமிழ் திரைப்பட நடிகரான விஜய், நேற்று நிவாரணநிதி 5 லட்ச ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளார் என டோலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு மாதங்கள் கழித்து நேற்று திடீரென நடிகர் விஜய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தெலுங்குத் திரையுலகினர் அதை வரவேற்றுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி