செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 8வது மகளிர் உலக குத்துச் சண்டை போட்டி: 2 இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்றனர்!…

8வது மகளிர் உலக குத்துச் சண்டை போட்டி: 2 இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்றனர்!…

8வது மகளிர் உலக குத்துச் சண்டை போட்டி: 2 இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்றனர்!… post thumbnail image
ஜேஜு:-கொரியாவில் நடைபெற்று வரும் உலக 8-வது மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் கஜகஸ்தானைச் சேர்ந்த நஸைம் கசைபேவிடம் தங்கத்தை பறிகொடுத்த இந்திய வீராங்கனை சார்ஜுபாலா வெள்ளிப்பதக்கத்தையும், 81 கிலோ பிரிவில் சீனாவின் யாங் க்சியோலியிடம் தங்கம் பெறும் வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனை சவீட்டி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில் இந்திய வீராங்கனைகள் வெறும் வெண்கலப்பதக்கங்களை மட்டுமே வென்றுள்ள நிலையில் நமது நாட்டைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் இம்முறை வெள்ளிப்பதக்கங்களை வெல்லும் அளவுக்கு முன்னேறியிருப்பது, குத்துச் சண்டை கலையில் இந்திய மகளிர் மேம்பாடு அடைந்து வருகின்றனர் என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி