செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.568 உயர்வு!…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.568 உயர்வு!…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.568 உயர்வு!… post thumbnail image
சென்னை:-ஆபரண தங்கத்தின் (22 கேரட்) விலை கடந்த மாதம் கடைசியில் ரூ.20 ஆயிரத்துக்கு கீழே வந்தது. அக்டோபர் 30ம் தேதி பவுன் விலை ரூ.20,176 ஆக இருந்தது. 31ம் தேதி ரூ.19,704 ஆக அதிரடியாக குறைந்தது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வண்ணமாய் இருந்தது. கடந்த 5ம் தேதி அன்று 19,376 ஆக குறைந்தது. அதன்பிறகு விலையில் சிறியதாக அதிகரிப்பும், குறைவதுமாக இருந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.568 அதிகரித்து உள்ளது. 17 தினங்களுக்கு பிறகு பவுன் ரூ.20 ஆயிரத்தை தொட்டது.நேற்று மாலை ஒரு கிராம் ரூ.2,438 ஆகவும், பவுன் ரூ.19,504 ஆகவும், இன்று காலை கிராமுக்கு ரூ.71–ம், பவுனுக்கு ரூ.568–ம் அதிகரித்தது.இன்று கிராம் விலை ரூ.2,509–க்கும், பவுன் ரூ.20,072–க்கும் விற்கப்பட்டது.இதேபோல வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.2,235 அதிகரித்து உள்ளது. இன்று ஒரு கிராமின் விலை ரூ.39.10 ஆகவும், ஒரு கிலோ ரூ.36,500 ஆகவும் இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி