செய்திகள்,திரையுலகம் கத்தி வெற்றி – லண்டன் சென்ற நடிகர் விஜய்!…

கத்தி வெற்றி – லண்டன் சென்ற நடிகர் விஜய்!…

கத்தி வெற்றி – லண்டன் சென்ற நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ கதை உரிமை பிரச்சனை, லைகா பெயரால் கத்தி படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளினால் கடும் மன உளைச்சலில் இருந்தாராம். பல தடைகளையும் தாண்டி கத்தி படம் வெளியானதோடு, தற்போது வசூலில் 100 கோடியை தாண்டி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால், எல்லா கவலைகளையும் மறந்து சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் விஜய்.

தற்போது ஓய்வெடுப்பதற்காக தன் மனைவி குழந்தைகள் உடன் லண்டன் சென்றுள்ளார். லண்டனில் தன் நண்பர்கள் மற்றும் மாமியார் குடும்பத்தினருடன் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த வாரம் சென்னை திரும்ப இருக்கிறார். விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் மாரீசன் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 10ஆம் தேதி சென்னை ஈசிஆரில் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரண்மனை செட்டில் தொடங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி