செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது!…

சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது!…

சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது!… post thumbnail image
புது டெல்லி:-14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.40.71 கமிஷனாக வழங்கி வந்தன. இந்த கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று, இந்த கமிஷன் தொகையை 3 ரூபாய் உயர்த்தி, சிலிண்டருக்கு ரூ.43.71 கமிஷனாக வழங்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன.

இதனையடுத்து, இந்த கமிஷன் உயர்வு வாடிக்கையாளர்களின் விற்பனை விலையில் எதிரொலிக்கும். சென்னையில் இதுவரை 401 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மானிய சிலிண்டரின் விலை, இனி 3 ரூபாய் அதிகரித்து, 404 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதேபோல், மானியமல்லாத சிலிண்டரின் விலையிலும் கூடுதலாக 3 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி