அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ரஜினிகாந்தை நம்பி கட்சி நடத்தவில்லை: டெல்லியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!…

ரஜினிகாந்தை நம்பி கட்சி நடத்தவில்லை: டெல்லியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!…

ரஜினிகாந்தை நம்பி கட்சி நடத்தவில்லை: டெல்லியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!… post thumbnail image
புதுடெல்லி:-தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லியில், தமிழக பாரதீய ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் பிரதாப் ரூடியை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றுக் கட்சி பாரதீய ஜனதாதான் என்று நாங்கள் சொல்லி வருகிறோம். தமிழகத்தில் எங்கள் கட்சியை பலப்படுத்த, பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ராஜீவ் பிரதாப் ரூடியின் வழிகாட்டுதல் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் பாரதீய ஜனதாவுக்கு தற்போது 10 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சிக்கு 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டு இருக்கிறோம். தமிழக அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி இருக்கிறது. இதை எதிர்த்து வருகிற 31ம் தேதி சென்னையில் பாரதீய ஜனதா போராட்டம் நடத்த இருக்கிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும். பால் விலை உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெறவேண்டும். ஆவின் நிறுவனம் வணிக நோக்கில் செயல்படக்கூடாது. சேவை நோக்கில் செயல்படவேண்டும். கூட்டணியில் இருப்பவர்கள் கருத்து கூற சுதந்திரம் இருக்கிறது. அதனை தெளிவுபடுத்தும் கடமை எங்களுக்கு இருக்கிறது. சில கருத்துகளை கூறுவதனால் கூட்டணி உடைந்து விட்டது என்று கூறமுடியாது. டெல்லியில் பிரதமரின் விருந்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படாததால் எங்களுக்குள் ஏதோ விரிசல் வந்துவிட்டது என்பது போல சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். அது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

ரஜினிகாந்தை நாங்கள் வலியப் போய் அழைக்கவில்லை. தேசிய எண்ணம் கொண்ட திரைப்பட கலைஞரான அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம். அதற்காக அவரை மட்டுமே முற்றாக நம்பி கட்சியை நடத்தவில்லை என்பது தெளிவான உண்மையாகும். ரஜினிகாந்த் மட்டுமல்ல. தேசிய எண்ணம் கொண்ட மற்ற நடிகர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் என்று எந்தத்துறையில் இருந்தாலும் அவர்கள் எங்களுடன் இணைய வேண்டும் என்று விரும்புகிறோம். நரேந்திர மோடியின் தலைமை, எங்கள் கொள்கை, எங்கள் தொண்டர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை நம்பித்தான் எங்கள் கட்சி இருக்கிறது. தமிழகத்தில் பாரதீய ஜனதா மிகப்பெரும் சக்தியாக மாறி அடித்தட்டு மக்களின் ஆதரவுடன் 2016ல் பெரியவெற்றியை பெற்று ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி