செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் உலகின் முதல் ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கிரீன்’ விமானம்!…

உலகின் முதல் ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கிரீன்’ விமானம்!…

உலகின் முதல் ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கிரீன்’ விமானம்!… post thumbnail image
லண்டன்:-உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கீரீன்’ விமானம் விரைவில் வரவுள்ளது. பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்க்கலாம். வானத்தை தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் வழக்கமான ஜன்னல்களுக்கு பதிலாக முழு நீள தொடுதிரைகள் பொருத்தப்படுகிறது.

பயணிகள் அவர்களது வசதிகளுக்கு ஏற்ப அந்த ஸ்கீரீனை டச் செய்து வானத்தை பார்க்கலாம். விமானத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள கேமிராக்கள் மூலம் ஹை-டெபனீஷன் குவாலிட்டியில் தெளிவாக விரும்பிய ஆங்கிளில் பார்க்க முடியும். மேலும், பயணிகள் தாங்களாகவே பிரைட்நெஸ் மற்றும் கான்ட்ராஸ்டை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். அதேபோல், அந்த திரையில் டிஜிட்டல் வால்பேப்பர்களும் தோன்றுகிறது. ஓ.எல்.இ.டி. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெல்லிய கண்ணாடி திரை எடை குறைந்ததும், நன்றாக வளையக்கூடியதுமாகும். இந்த திரையை பொருத்துவதால் விமானத்தின் எடையும் கணிசமாக குறைகிறது. எந்த ஒரு விமானத்திற்கும் எடை ஒரு பிரச்சனையாகவே இருக்கும். எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு விமானம் 80 சதவீத எடையை பிடித்துக் கொள்கிறது.

விமானத்தின் எடை குறையும் ஒவ்வொரு சதவீதமும் 0.75 சதவீத எரிபொருளை சேமிக்கிறது. அந்த வகையில், இந்த டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறும், செலவையும் குறைக்கும். தற்போதுள்ள கண்ணாடி ஜன்னல் திரைக்கு கடினமான பொருட்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில், 35 ஆயிரம் அடி உயரத்தல் பறக்கும்போது ஏற்படும் காற்றின் அழுத்தத்தால் கண்ணாடி கீறிட்டு உடையாமல் இருக்க வேண்டும். ஆனால், புதிய டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தில் அப்படி எதுவும் தேவையில்லை. சி.பி.ஐ. எனப்படும் இந்த புதிய தொழில்நுட்பம் விரைவில் சோதனைக்கு வரும் என ஆராயச்சியாளர் சைமன் ஓகியர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி