செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜீத்துக்காக காத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

நடிகர் அஜீத்துக்காக காத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

நடிகர் அஜீத்துக்காக காத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது தனது முதல் பட நாயகனான அஜீத்தை வைத்து மீண்டும் படம் பண்ணவும் தான் ஆர்வத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளர். மேலும், நான் உதவி இயக்குனராக இருந்தபோது ரொம்ப சின்ன பையனாக இருப்பேன். அப்போது நான் சொல்லும் கதைகள் சிறப்பாக இருந்தாலும் என்னை நம்பி படம் தர தயங்குவார்கள்.

ஆனால், அஜீத் சார் என்னை நம்பி தீனா படத்தில் நடித்தார். அப்படி அவர் அந்த படத்தில் நடித்ததினால்தான் படமும் பேசப்பட்டது. இருப்பினும் அதையடுத்து நான் வெவ்வேறு நடிகர்களை வைத்து படம் இயக்கி வருகிறேன். ஆனால் அஜீத்துடன் இணைவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. இருப்பினும் அவர் எப்போது அழைத்தாலும் அவரை வைத்து படம் பண்ண நான் ரெடியாகவே இருக்கிறேன். அவருக்கான கதையும் என்னிடம் ரெடியாக உள்ளது என்று தற்போது தெரிவித்திருக்கிறார் முருகதாஸ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி