செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் படப்பிடிப்பில் விபத்து: ஆற்றில் மூழ்கினார் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி!…

படப்பிடிப்பில் விபத்து: ஆற்றில் மூழ்கினார் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி!…

படப்பிடிப்பில் விபத்து: ஆற்றில் மூழ்கினார் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி!… post thumbnail image
சென்னை:-நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன், கில்லி, தில், பகவதி, தமிழன் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாலிவுட் டயரி என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு உத்தர பிரதேச மாநிலம் ராய்பூரில் உள்ள சிவ்நாத் ஆற்று பகுதியில் நடந்து வருகிறது.

ஆசிஷ் வித்யார்த்தி ஆற்றில் இறங்கி பூஜை செய்து விட்டு குளிப்பது போன்ற காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆசிஷ் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். ஆற்று வெள்ளம் அவரை சில அடி தூரம் இழுத்துச் சென்றது. படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் படத்தின் காட்சி என்று கருதிக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். இயக்குனர் கிருஷ்ணா ராவ் இது காட்சி இல்லை.

நிஜமாகவே அவர் ஆற்றில் முழ்குகிறார் என்று கத்தினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் விகாஷ் சிங் என்பவர் ஆற்றில் குதித்து ஆசிஷை காப்பாற்றினார்.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படப்பிடிப்பு குழுவினர் ஓட்டலுக்கு திரும்பினர். பின்னர் ஆசிஷ், அந்த போலீஸ்காரரை அழைத்து பாராட்டியதோடு அவருடன் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி