செய்திகள் பிரேசிலில் 39 பேரை சுட்டு கொன்ற வாலிபர் கைது!…

பிரேசிலில் 39 பேரை சுட்டு கொன்ற வாலிபர் கைது!…

பிரேசிலில் 39 பேரை சுட்டு கொன்ற வாலிபர் கைது!… post thumbnail image
பிரேசிலியா:-பிரேசில் நாட்டின் கொயானியா நகரை சேர்ந்தவர் தியாகோ ரோச்சா (26). அப்பகுதியில் தொடர் கொலைகள் நடைபெற்று வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இவனது வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒரு துப்பாக்கி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அவனிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவன் 39 பேரை கொலை செய்தது தெரிய வந்தது.

எனவே அவனை போலீசார் கைது செய்தனர். கொலை செய்தவர்களில் 14 வயது சிறுமி உள்பட 16 பேர் பெண்கள் ஆவர். கடந்த ஆண்டுகளில் மட்டும் 33 பேரை கொன்ற இவன் இந்த ஆண்டில் இதுவரை 6 பேரை கொலை செய்து இருக்கிறான். இந்த தகவலை அவன் போலீசாரிடம் வாக்கு மூலமாக கொடுத்து இருக்கிறான். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டே பலரை சுட்டுக் கொன்றதாக கூறினான். தனக்கு யார் சரியாக படவில்லையோ அவர்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்து இருக்கிறான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி