செய்திகள்,திரையுலகம் தமிழ்நாட்டிலும் அழுத்தமாக கால்பதிக்கும் நடிகர் ஷாரூக்கான்!…

தமிழ்நாட்டிலும் அழுத்தமாக கால்பதிக்கும் நடிகர் ஷாரூக்கான்!…

தமிழ்நாட்டிலும் அழுத்தமாக கால்பதிக்கும் நடிகர் ஷாரூக்கான்!… post thumbnail image
சென்னை:-மற்ற இந்தி நடிகர்களை விட தென்னிந்தியா மீது குறிப்பாக, கோலிவுட் சினிமா மீது அதிக ஈடுபாடு காட்டி வரும் ஷாரூக்கான், தான் நடித்த ரா-1 படத்தில் ரஜினியையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து தமிழக ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அதையடுத்து சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்த தீபிகா படுகோனேவை காதலிப்பவராக நடித்தார். அதோடு, சத்யராஜ், மனோரமா போன்ற தமிழ் நடிகர்களும் அப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது ஹேப்பி நியூ இயர் படத்தையும், வட இந்தியாவைப் போலவே தென்னிந்தியாவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட்டு இன்னும் அழுத்தமாக கால்பதிக்க திட்டமிட்டுள்ளார். அதோடு தனது அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவிலுள்ள முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து தனது படங்களை தமிழிலும் பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் முயற்சியிலும் இறங்கப்போவதாக கூறியுள்ள ஷாரூக்கான். தமிழ் சினிமாவிலுள்ள பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் எனக்கு மிக பிடித்தமான டைரக்டர்கள் அதனால் அவர்கள் படங்களில் நடிக்கவும ஆர்வமாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி