செய்திகள்,திரையுலகம் செல்பிபுள்ள பாடலுக்கு 100 நடன கலைஞர்களுடன் ஆடிய விஜய்-சமந்தா!…

செல்பிபுள்ள பாடலுக்கு 100 நடன கலைஞர்களுடன் ஆடிய விஜய்-சமந்தா!…

செல்பிபுள்ள பாடலுக்கு 100 நடன கலைஞர்களுடன் ஆடிய விஜய்-சமந்தா!… post thumbnail image
சென்னை:-விஜய்சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் விஜய் செல்பிபுள்ள என்ற பாடலை பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க வேண்டும் என்று விரும்பிய படக்குழு, முதலில் வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டனர். ஆனால், படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதால் வெளிநாடுகளில் அந்த பாடலை படமாக்கினால் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என நினைத்த படக்குழு மும்பையிலேயே பிரம்மாண்ட அரங்கு அமைத்து படமாக்க முடிவெடுத்தனர்.
அதன்படி, மும்பை பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து இந்த பாடலை படமாக்கியுள்ளனர். இப்பாடலில் விஜய்யும், சமந்தாவும் 100 நடனக்கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.

கத்தி படத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள படக்குழு, விஜய்யின் ‘செல்பிபுள்ள’ பாடலுக்கு மட்டும் சிறப்பு கவனம் செலுத்தி படமாக்கியுள்ளனர். பாடலும் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்றாக அமையும் என நம்பப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி