செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி-பாகிஸ்தானின் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!…

இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி-பாகிஸ்தானின் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!…

இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி-பாகிஸ்தானின் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!… post thumbnail image
ஸ்டாக்ஹோம்:-2014 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.மனித உரிமை ஆர்வலர்களான இருவரும் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்ததற்காவும், அவர்களின் உரிமைக்காக பாடுபட்டதற்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் 60 வயதான சத்யார்த்தி குழந்தை தொழிலாளர்கள் மீட்பிற்கும், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தாலிபான்களின் அடக்குமுறையை எதிர்த்து போராடிய மலாலா துப்பாக்கியால் கூடப்பட்டார். மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின் உயிர் பிழைத்த அவர் பெண் கல்விக்காக போராடி வருகிறார். இவர்களின் இந்த முயற்சியை பாராட்டும் வகையிலேயே தற்போது இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி