செய்திகள்,திரையுலகம் 2 நாட்களில் 50 கோடியை தாண்டியது ‘பேங் பேங்’ படத்தின் வசூல்!…

2 நாட்களில் 50 கோடியை தாண்டியது ‘பேங் பேங்’ படத்தின் வசூல்!…

2 நாட்களில் 50 கோடியை தாண்டியது ‘பேங் பேங்’ படத்தின் வசூல்!… post thumbnail image
மும்பை:-ஹிருத்திக் ரோஷன்-கத்ரினா கைப் நடித்து வெளிவந்துள்ள ‘பேங் பேங்’ படத்தின் வசூல், ரிலீசான முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.50 கோடியை தாண்டி உள்ளது. இந்த 2 நாட்களில் இப்படம் ரூ.51.62 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் இந்த படம் முதல் இரண்டு நாட்களில் ரூ.50 கோடி வரை தான் வசூலிக்கும் என எதிர்பார்த்தார்களாம்.பேங் பேங் படம் ரிலீசான முதல் நாளன்றே ரூ.27.54 வசூலை அள்ளி, பாலிவுட்டில் ரிலீசான அன்றே அதிக வசூலை அள்ளிய டாப் 5 படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது.

2ம் நாளில் ரூ.24.08 கோடியை வசூலித்தது. 2 நாளில் மொத்த வசூல் 51.62 கோடியாகும். ஹிருத்திக்-கத்ரீனாவின் இதுவரை பாலிவுட்டில் கண்டிறாத ஆக்ஷன், அவர்களின் கெமிஸ்ட்ரி, சூப்பர்ஹிட் இசை, ஹிருத்திக்கின் அசத்தல் நடனம், வித்தியாசமான கதை என பலவித சிறப்பம்சங்களால் இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மசாலா கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம், 2014ம் ஆண்டு அதிக வசூலை அள்ளிக் குவிக்கம் சூப்பர்ஹிட் படமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் முதல் 2 நாட்களிலேயே 13 சதவீதம் முதலீட்டு தொகையை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி