சென்னை:-கடந்த வாரத்தில் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்நோக்கிய ‘ஐ’ மற்றும் ‘கத்தி’ படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘ஐ’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், ‘கத்தி’ படத்திற்கு அனிருத்தும் இசையமைத்து இருந்தார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், அனிருத்தும் இசையும் தற்போது ஐ-டியூன்ஸில் இந்திப் படங்களுக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறது. ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ மற்றும் ரித்திக் ரோஷனின் ‘பாங் பாங்’ ஆகிய படங்களின் இசையினை முதல் இடத்திற்கு வரவிடாமல் ‘கத்தி’ மற்றும் ‘ஐ’ ஆகிய படங்களின் பாடல்கள் முதல் இடத்தை பிடித்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி