செய்திகள் கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி!…வாலிபர் கைது…

கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி!…வாலிபர் கைது…

கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி!…வாலிபர் கைது… post thumbnail image
நகரி:-முகமது அஜான் (23) என்பவர் ஐதராபாத் மயிலானுபள்ளி அருகே உள்ள பலக்லுமா பிதலகுண்டா பகுதியைச் சேர்ந்தவர். இந்த பகுதியில் 7 வயது சிறுமி 3 சிறுவர்களுடன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர்களுக்கு மிட்டாய் கொடுத்து முகமது ஆஜான் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சிறுமியை மட்டும் கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டினார். பின்னர் சிறுமியிடம் சில்மிஷம் செய்து கற்பழிக்க முயன்றார். உடன் வந்த சிறுவர்கள் அருகில் நின்று பார்த்துக்கொண்டு இருந்தனர்.உடனே சிறுமி தனக்கு அவசரமாக சிறுநீர் வருகிறது. கட்டை அவிழ்த்து விடுங்கள் என்றார். முகமது ஆஜான் கட்டை அவிழ்த்தார்.

உடனே சிறுமி பாத்ரூம் சென்று கூச்சலிட்டு மற்றவர்களை அழைத்தார். அவர்களிடம் வாலிபரின் சில்மிஷத்தை கூறினார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. மயிலானுபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் முகமது ஆஜானை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி