செய்திகள் துரதிருஷ்டம் விலக நாயை திருமணம் செய்த 18 வயது இளம் பெண்!…

துரதிருஷ்டம் விலக நாயை திருமணம் செய்த 18 வயது இளம் பெண்!…

துரதிருஷ்டம் விலக நாயை திருமணம் செய்த 18 வயது இளம் பெண்!… post thumbnail image
ராஞ்சி:-ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் பெண்ணின் பெயர் மங்கில முந்தா. இவரை ‘பெவிக்கால்’ போல துரதிருஷ்டம் ஒட்டிக்கொண்டு இருந்ததாம். இதனால் இவரை திருமணம் செய்யும் இளைஞருக்கு ஆபத்து ஏற்படும் என கூறப்பட்டது. இதற்கு பரிகாரம் தேட அந்த பெண்ணின் உறவினர்கள் தங்கள் குலகுருவிடம் ஆலோசனை கேட்டனர். அப்போது அந்த குரு, மங்கில முந்தாவுக்கு நாயுடன் திருமணம் செய்து வைத்தால் துரதிருஷ்டம் விலகும் என கூறினார்.

இதையடுத்து ‘ஷேரு’ என்ற நாயை மணமகனாக உறவினர்கள் தேர்ந்தெடுத்தனர். வெறும் நாய் என்று பார்க்காமல் மணமகனுக்குரிய அனைத்து மரியாதைகளையும் அந்த நாய்க்கு அளித்தனர்.
அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் மாப்பிள்ளை ஊர்வலம் நடப்பது போல் நாயை அலங்கரித்து காரில் அழைத்து வந்தனர். பின்னர் நாய்க்கும் இளம் பெண் மங்கிலா முந்தாவுக்கும் திருமணம் நடந்தது.

தாலியை நாயின் கையில் தொட்டு பெண்ணின் கழுத்தில் கட்டினார்கள். அதன் பிறகும் திருமண சடங்குகள் நடைபெற்றன. விழாவுக்கு வந்தவர்ளுக்கு விருந்தும் பரிமாறப்பட்டது.திருமண சடங்குகள் முடிந்ததும், நாய் விரட்டி அடிக்கப்பட்டது. பெண்ணுக்கு துரதிருஷ்டம் விலகவிட்டதாகவும் இனி அவர் விரும்பியவரை திருமணம் செய்யது கொள்ளலாம் என்றும், குலகுரு தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி