செய்திகள் ஒரே ஒரு சிகரெட்டுக்காக தந்தையை குத்திக் கொன்ற மகன்!…

ஒரே ஒரு சிகரெட்டுக்காக தந்தையை குத்திக் கொன்ற மகன்!…

ஒரே ஒரு சிகரெட்டுக்காக தந்தையை குத்திக் கொன்ற மகன்!… post thumbnail image
அபுஜா:-நைஜீரியாவின் எடோ மாநிலத்தில் உள்ள எட்சக்கோ பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் மோமோடு. தனது தந்தைக்கு தெரியாமல் அவரது பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை திருடியது தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மோமோடு, பெற்ற தந்தை என்றும் பாராமல் அவரை கண்மூடித்தனமாக கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகி விட்டார்.

கத்திக்குத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த தந்தையின் மரணச் செய்திகூட தெரியாமல், பக்கத்து ஊரில் சுற்றித்திரிந்த மோமோடுவை கைது செய்த போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில்
அடைத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி