அரசியல்,செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரெயில்வே மந்திரி மகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு!…

ரெயில்வே மந்திரி மகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு!…

ரெயில்வே மந்திரி மகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு!… post thumbnail image
பெங்களூரு:-ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகனான கார்த்திக்கு நேற்று குடகு மாவட்டத்தில் உள்ள குஷால்நகர் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்நிலையில், நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த கன்னட சினிமா கதாநாயகி மைத்ரேயி என்பவர் கார்த்திக் கவுடா மீது திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

ஏற்கனவே, தன்னை திருமணம் செய்து கொண்ட கார்த்திக் கவுடாவுக்கு எப்படி இன்னொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யலாம். என்று கேள்வி எழுப்பிய அவர், கார்த்திக் கவுடா தன்னை கற்பழித்து, மோசம் செய்து விட்டதாக பெங்களூரு ஆர்.டி.நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.இதனையடுத்து, கார்த்திக் கவுடா மீது கற்பழிப்பு, மோசடி ஆகிய குற்றப்பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இது தொடர்பாக தனது மகனுடன் பேச உள்ளதாகவும் கூறினார்.திறந்த புத்தகமாக இருக்கும் தனது பொதுவாழ்வை களங்கப்படுத்தும் நோக்கத்தில் சிலர் சதி வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் இந்தப் பெண்ணை ஏவிவிட்டு தன்னை மிரட்ட நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி