செய்திகள்,திரையுலகம் லிமிட்டை தாண்டியதால் சமந்தாவை ஓரங்கட்டிய நடிகர் சித்தார்த்!…

லிமிட்டை தாண்டியதால் சமந்தாவை ஓரங்கட்டிய நடிகர் சித்தார்த்!…

லிமிட்டை தாண்டியதால் சமந்தாவை ஓரங்கட்டிய நடிகர் சித்தார்த்!… post thumbnail image
சென்னை:-சித்தார்த்சமந்தா இருவரும் ஒரேயொரு தெலுங்கு படத்தில்தான் இணைந்து நடித்தனர். அதற்குள் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து விட்டது. இருவரும் ஜோடி போட்டு சினிமா விழாக்களில் ஆஜரானார்கள். இந்த சூழ்நிலையில், சித்தார்த்தின் ஆலோசனைப்படி கிளாமர் விசயத்தில் கண்டிசன் போட்டு நடித்து வந்த சமந்தா, மகேஷ்பாபுவுடன் நடித்த ஒரு படத்தில் திடீரென்று அவரது கட்டுப்பாட்டை கருத்தில் கொள்ளாமல் லிமிட் தாண்டி விட்டாராம்.

அது சித்தார்த்தின் கவனத்துக்கு சென்றபோது கடும் கோபத்துக்கு ஆளானவர். சமந்தாவையும் அதிலிருந்து ஓரங்கட்டத் தொடங்கினாராம்.அதோடு, அஞ்சான், கத்தி படங்களில் இன்னும் அதிரடியாக பிகினி கலாச்சாரத்துக்கு சமந்தா மாறியிருப்பதால், ஏற்கனவே விரிசல் விழுந்த அவர்களின் உறவு பாலம் இனிமேல் இணைவதற்கு சான்சே இல்லை என்கிறார்கள்.இதன்காரணமாகத்தான், சமீபத்தில் திருமணம் பற்றி கூறும்போது, இன்னும் 2 வருடம் கழித்துதான் திருமணம் செய்வேன் என்ற சித்தார்த், பெண் யார் என்பதையும் அப்போதுதான் முடிவு செய்வேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி