செய்திகள்,திரையுலகம் ராஜபக்ஷே மகனுடன் ‘வேட்டை’ நாயகி நெருக்கம்?…

ராஜபக்ஷே மகனுடன் ‘வேட்டை’ நாயகி நெருக்கம்?…

ராஜபக்ஷே மகனுடன் ‘வேட்டை’ நாயகி நெருக்கம்?… post thumbnail image
சென்னை:-இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் மகன் நமல் ராஜபக்ஷேவுடன் நடிகை சமீரா ரெட்டி நெருக்கமாக இருக்கும் படங்கள் இணைய தளங்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராஜபக்ஷேவின் மகனுக்கு எப்போதுமே இந்திய படங்கள் மீது ஆர்வம் அதிகம். படம் தயாரிக்க வேண்டும். நடிகர் நடிகைளுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாராம்.

இந்திய நட்சத்திரங்களை வைத்து இலங்கையில் பிரமாண்ட கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது நமல் ராஜபக்ஷேவின் நீண்ட நாள் ஆசை. ஆனால் அரசியல் சூழ்நிலை காரணமாக அது நடக்கவில்லை.ஆனாலும் அவர் இந்திய நடிகைகளை குறிப்பாக தமிழ் படங்களில் நடிப்பவர்களை வெளிநாட்டில் சந்தித்து நெருக்கத்தை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கான ஆதாரமாக இந்தப் படங்கள் வெளிவந்திருப்பதாக கூறுகிறார்கள். சமீரா ரெட்டி தமிழில் வெடி, வேட்டை, வாரணம் ஆயிரம் படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி