செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மாணவர் அமைப்புகளை சமாதானப்படுத்தும் நடிகர் விஜய்யின் ஆதரவாளர்கள்!…

மாணவர் அமைப்புகளை சமாதானப்படுத்தும் நடிகர் விஜய்யின் ஆதரவாளர்கள்!…

மாணவர் அமைப்புகளை சமாதானப்படுத்தும் நடிகர் விஜய்யின் ஆதரவாளர்கள்!… post thumbnail image
சென்னை:-தீபாவளிக்கு திரைக்கு வரத்தயாராகிக்கொண்டிருக்கிறது விஜய்யின் கத்தி. இந்த நேத்தில் தலைவா படத்தின் ரிலீசுக்கு முன்பு அப்படம் ரிலீசாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் எழுந்தது போன்று, இப்போது கத்தியை வெளியிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று மாணவர் அமைப்புகள் கொதித்தெழுந்துள்ளன.அதோடு, ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் தயாரித்திருப்பது உறுதியாகி விட்ட நிலையில், மேலும் சில ஈழத்தமிழர் ஆதரவாளர்களும் கத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விட்டால் விசயம் இன்னும் விஸ்வரூபம் எடுத்து விடும் என்று உஷாரான அப்பட டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஆதரவுக்குரல் கொடுத்து வரும் சில தமிழக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு கோரினார்.இதன்காரணமாக, மேடைகளில் விஜய்யின் தந்தையை அப்பா என்றே அழைக்கும் சீமான், முதன்முதலாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். அதோடு லைகாவை எதிர்த்து போராட மாட்டேன் என்றும் தெரிவித்தார். அதனால் மாணவர்கள் பிரச்சினை அதோடு ஓய்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் பிரச்சினை பெரிதாகிக் கொண்டேதான் இருந்தது. அதோடு, விஜய் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் மாணவர் அமைப்புகள் மிரட்டல் விடுத்தன.

இதையடுத்து, விஜய்யின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், இப்போது மாணவர் அமைப்புகள் விஜய்யை சநதித்து ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு செய்தியை உலவி விட்டுள்ளனர். அதோடு விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சீமான் உள்ளிட்ட ஈழத்தமிழ் ஆதரவாளர்களே, இந்த பிரச்சினைக்கு தீர்வுகட்ட வேண்டுமென்று மாணவர் அமைப்புகளை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி