செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு மோசமான சாதனை செய்த இந்திய கிரிக்கெட் அணி!…

மோசமான சாதனை செய்த இந்திய கிரிக்கெட் அணி!…

மோசமான சாதனை செய்த இந்திய கிரிக்கெட் அணி!… post thumbnail image
மான்செஸ்டர்:-இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்டூவர்ட் பிராட்டின் வேகத்தில் சீர்குலைந்து 152 ரன்களில் சுருண்டனர். இந்திய பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தது, மோசமான சாதனை பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. முரளி விஜய், விராட் கோக்லி, புஜாரா, ரவிந்தர் ஜடேஜா, புவனேஷ் குமார், பங்கஜ் சிங் ஆகியோர் ரன் கணக்கை துவங்காமலேயே ஆட்டம் இழந்தனர்.

வெறும் மூன்று பேட்ஸ்மன்களே இரட்டை இலக்க ரன்களை எடுத்துள்ளனர். தோனி(71) ரகனே (24) அஷ்வின் (40) ஆகியோர் ஓரளவு ரன் எடுத்து இந்தியா 150 ரன்களை கடக்க உதவினர்.ஒரு இன்னிங்ஸில் ஆறு பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் இன்றி ஆட்டம் இழந்து, இந்தியா மோசமான சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ஏற்கனவே தென் ஆப்ரிக்கா, வங்களதேசம் அணிகளுடன் இந்தியா இந்த மோசமான சாதனையை பகிரந்து கொண்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி