ஆக்ரா:-உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. தாஜ்மகாலுக்கு உள்ளே வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் ஆக்ரா போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் தாஜ்மகாலுக்குள் சோதனையிட்டனர்.1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த தீவிர சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரின் தொலைபேசிக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனினும் அவரது நம்பரை வைத்து விசாரித்ததில், அவர் ஆக்ரா மாவட்டத்துக்கு உட்பட்ட கண்டோலி பகுதியை சேர்ந்த ராம் வீர் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி