செய்திகள்,முதன்மை செய்திகள் வாரணாசியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் மாயம்!…

வாரணாசியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் மாயம்!…

வாரணாசியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் மாயம்!… post thumbnail image
வாரணாசி:-வாரணாசி அருகே ரோகானியா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெட்டாவர் கட் என்ற இடத்தில் 40 பேரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.வாரணாசியில் இருந்து மீர்சாபூர் நோக்கி கங்கை நதியில் 40 பேருடன் அப்படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததால் இவ்விபத்து நேர்ந்ததாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப்ரதீப் குப்தா தெரிவித்தார்.

படகு நீரில் மூழ்கிய போது அதில் சென்றுகொண்டிருந்த 22 பேருக்கு நீச்சல் தெரிந்திருந்ததால் அவர்கள் நீந்திக் கரை சேர்ந்து உயிர்தப்பியதாக அவர் மேலும் தெரிவித்தார்.காணாமல் போன 18 பேரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள குப்தா, நீச்சல் தெரிந்தவர்கள் பலரும் காணாமல் போனவர்களை மீட்கும் பொருட்டு அப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி