செய்திகள்,திரையுலகம் அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!…

அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!…

அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-சித்தியுடன் பிரச்சினை, டைரக்டர் களஞ்சியத்துடன் பிரச்சினை போன்ற காரணங்களால் அவர் இனிமேல் தெலுங்கு படங்களில் மட்டுமே நடிப்பார். தமிழுக்கு வர மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுராஜ் இயக்கும் ஜெயம்ரவி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் அஞ்சலி.

இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் அஞ்சலி. இதே படத்தில் இன்னொரு மாடர்ன் ரோலுக்கு நடிகை தேடி வந்தவர்கள், மெட்ராஸ் படத்தில் நடித்துள்ள கேத்ரின் தெரசாவை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், அது ரொம்ப மெச்சூரிட்டியான வேடம். தமிழில் இன்னும் கேத்ரின் தெரசா நடித்த படமே வெளியாகாத நிலையில், அவரை நம்பி பவர்புல் வேடத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்கள் இப்போது அந்த படத்துக்கு திரிஷாவை புக் பண்ணியுள்ளனர்.

ஏற்கனவே ஜெயம்ரவியுடன் பூலோகம் படத்தில் த்ரிஷா நடித்திருப்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு எளிதில் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்படி எதிர்பாராதவிதமாக த்ரிஷா அப்படத்தில் கமிட்டாகியிருப்பதால் பலத்த அதிர்ச்சியில் இருக்கிறார் அஞ்சலி. காரணம், அவர் தன்னை விட பெரிய நடிகை என்பதோடு வெயிட்டான வேடத்தில் நடிப்பதால், ஏற்கனவே தான் த்ரிஷாவுடன் நடித்த மங்காத்தா படத்தைப்போன்று இந்த படத்திலும் அவரே முக்கிய நாயகியாகி தன்னை ஓரங்கட்டி விடுவாரோ என்று கடும் கலவரத்தில் இருக்கிறார் அஞ்சலி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி