செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் வங்காளதேசத்தில் 250 பயணிகளுடன் சென்ற படகு நீரில் மூழ்கி விபத்து!…

வங்காளதேசத்தில் 250 பயணிகளுடன் சென்ற படகு நீரில் மூழ்கி விபத்து!…

வங்காளதேசத்தில் 250 பயணிகளுடன் சென்ற படகு நீரில் மூழ்கி விபத்து!… post thumbnail image
டாக்கா:-வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவின் தென்பகுதியில் உள்ள பத்மா ஆற்றில் 250 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று முன்சிகஞ்ச் என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் சென்று உள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் நீந்தி கரையை அடைந்து உள்ளனர் என வங்காள தேச நீர் போக்குவரத்து துறை கூறி உள்ளது.

அந்நாட்டில் பெருவாரியான் ஏழை மக்கள் ஆற்றுப் பகுதிகளை அன்றாடம் படகுகள் மூலம் கடந்து சென்று தங்களின் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இது போன்ற விபத்துக்களை அவர்கள் அன்றாடம் சந்திக்க நேரிடுகிறது.அளவுக்கு அதிகமான பயணிகளை படகுகளில் ஏற்றி செல்வதாலேயே இந்த விபத்து நடைபெறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி